Wednesday, August 31, 2011

நான் எனும் முடிவு


ரத்த மணம், எச்சில் வீரியம்
பின்னிப் பிணைந்து
கிளர்ந்தெழுப்ப
மரணத்தைச் செலுத்தியபடி
கணக்கிடுகிறேன்
மிச்சமான உயிர்களின்
நாடிகள் அனைத்தையும்..

மயான விதிகள்
காக்கப்படும் ஓரிடத்தில்
என்னுள் தெறித்து விழும்
புன்னகையை
எப்படி முயன்றும்
மறைக்க முடியவில்லை..

கண்ணாடி சில்லுகளுக்குள்
உறைந்திருந்த செந்நீரை
அகால தாகம் தீர
தின்றுத் தீர்த்தும்
அடுத்து நிகழ்வதற்கு இழைகிறது
சலனமற்று விரியும்
மரணப் புன்னகை..
.
கவனம்...
பாதையில் நிசப்தத்துடன்
மிச்சப்பட்ட உயிர்களின் ஓலம்..

 - தேனு

நன்றி அதீதம்

No comments:

Post a Comment