Sunday, August 28, 2011

ஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்


மேசைமீது ஒன்றன்மீது ஒன்றாக
அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களில்
ஊர்ந்தேறிக் கொண்டிருந்தது
வெயில் நுகருமொரு
சொற்ப மரநிழல்..

நிழல் துப்பிய குளிருணர்வில்
புத்தகங்கள் ஒன்றொன்றும்
காந்தப்பிணைப்புடன் இறுக்கமடைய,
கிழிசல்கள் வழி
எழுத்துக்கள் சில
வெப்பமொழியில் ஏதேதோ
பிதற்றத் துவங்கின..

என் விரல் நீவிய புத்தகமொன்று
தான் தானாகவும்
தானே மீதமாகவும் இருக்க,
அட்டைப்படத்தில் நிறைந்திருந்தனர்
சிறுமிகள் சிலர்…
அழுக்குச் சீருடையுடனும்
நாணயச் சிரிப்புடனும்..

– தேனு

நன்றி திண்ணை,
http://puthu.thinnai.com/?p=2064 

No comments:

Post a Comment