Friday, July 29, 2011

உயிர்ப்பூக்களின் மெல்லிய இதழ்கள்


வெயில் முளைத்திடும்
அடிவானத்தின் விளிம்பினில்
விளக்கொளியைத் தேடி மரிக்கின்றன
விட்டில் பூச்சிகள் சில..

மரித்திட்ட பூச்சிகளின்
சாம்பல் துளிகளில்
உயிர்ப்புகளைப் பூசினாற்போல்
உயிர்த்தெழுகிறது விடியல் பூவிதழொன்று..

மணக்கும் அப்பூவிதழில்
மௌனித்திருந்தது,
இருப்பிற்கும் இறப்பிற்கும்
இடையில்
மெல்லியதோர்  ஊடல்மொழி...

காலங்களறியாது
நீர்க்குமிழ்களின்  வண்ணத்தில்
தன்னைத்தானே வரைந்து
நிதர்சனமாய் நகைத்து நிற்கிறாள்
வெப்பச் சிறகுகளுடன் சிறுமி யாழினி...



 - தேனு 

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4503

1 comment:

  1. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete