Tuesday, May 17, 2011

ஒலிபெறாத பொய்களின் நிறங்கள்


வார்த்தைக்கூடை நிரம்ப
பலவண்ண பொய்களுடன்
வெளியேறுகிறேன்
காலைவெயில் நுகரும்
வியர்வையுடன்...
.
ஒவ்வொரு பொய்
துழாவியெடுத்து
சூடிக் கொள்ளும் வேளையிலும்
கண்ணீர்த்துளிகளுடன்
என் கற்பனை தோட்டத்தில்
ஒரு மலர் உதிர்கிறது...
.
நிலவு நீண்டிடும்
இருளினை அள்ளிப் பருகி
நாளின் இறுதியில் நுழைகிறேன்,
நிர்வாணமாய் நிற்கிறது
அருமை தோட்டம்..
.
மறுநாள் வியர்வை நுகர
நான் வெளியேறுகையில்
தோட்டம் நிரம்ப
வண்ண மலர்கள் பூத்துச்
சிரித்திருக்கின்றன..

- தேனு

நன்றி திண்ணை,

3 comments:

  1. அழகான வார்த்தை அலங்காரம் உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள் . பகிர்ந்தமைக்கு நன்றி . திண்ணையில் வெளிவதமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete