Thursday, May 5, 2011

மீனின தேவதை


அழகிய நீர்த்தேக்கமொன்றில்
தங்க மீன்கள் சில
அலைகளென சிலாகித்துக் கிடந்தன..
ஒவ்வொன்றாய் வெளியெடுத்து
இதழ் பதித்து தனக்கான நீர் ஜாடியில்
விட்டுக்கொண்டிருந்தாள் சிறுமியொருத்தி..
மௌனம் பேசிய
தேவதை  நிற மீனை
இறுதியாக விடுத்ததும்
தன்னை மறந்து
ரசனைகளின் இளவரசியாய்
நின்றிருந்தாள்..


அடுத்த சில நிமிடங்களில்
நீர்த்திவளைகளுக்கு மத்தியில்
ஆச்சர்ய விழிகளுடன்
தங்க நிற நுகர்வுச்செதில்கள்
அவளுக்கு வெளிவர
துவங்கியிருந்தன..


 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4268
 

No comments:

Post a Comment