Saturday, April 6, 2013

பிரிவின் வண்ணம் பூசும் ஒரு சித்திரச்சுவர்


ஒரு வருத்தத்தின் சாயலைப் பூசிக்கொண்ட
என்னறையின் சுவர்களில்
நாங்கள் நானாக மாறியதோர்
பிரிவின் கதையை வரையத் தெரியவில்லை,
வளையத் தெரியவுமில்லை எனக்கு..
தனிமையின் விரல் கோர்த்து
தத்தி தத்தி நடை பயில்கிறேன்,
வண்ணச்சுவர்களை அடையும் ஒரு நூலிழையில்
தனிமையின் விரல்விடுத்து
மௌனத்தின் விரல் தேடி நிற்கிறேன்..
வட்டத்தின் ஒரு புள்ளிக்குள்
சொல்ல மறுத்த மறதியின்
விழுக்காட்டில் மொத்தமாய் தொக்கியபடி
என்னை வரைந்து கொண்டிருக்கிறது
பிரிவின் நிறத்தில் குழைத்தெடுத்த தூரிகை..
தேனு
- நன்றி கீற்று,

1 comment:

  1. ரசிக்க வைக்கும் வரிகள் அருமை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete