Monday, November 21, 2011

வரையப்படும் அகால மௌனம்


அடுக்கு மாடி குடியிருப்பின்
பளிங்குக் கற்கள் தோறும்
செதில் செதிலாக
வரையப்பட்டு நீர்க்கிறது
கண்ணீர்த்துளிகளின்
ஒப்புதல் மௌனம்..
கரைந்திடும்
மின்வளையங்களுடன்
மௌனமாய் கடத்தப்படும்
மின்மினிகளைக் கண்டு
உரக்கச் சிரிக்கின்றன
பளிங்குச்சுவரின் வண்ணத்துப்பூச்சிகள்..
- தேனு
 
நன்றி கீற்று,

No comments:

Post a Comment