Tuesday, November 15, 2011

நரகத்தின் உத்தமம்



இரவின் விளிம்பினில்
தொடர்ந்து வரும்
வாலறுந்த கனவுகள் மூன்று
என்னை மீறி
வெவ்வேறு திசை நோக்கி நகர்கின்றன..

முதல் திசையில்
வெண்ணிறத்தில்
ஒற்றை மலருடன் பெண்ணொருத்தியும்,
இரண்டாம் திசையில்
பழுப்பு நிற கண்களுடன்
கூன் விழுந்த மிருகமொன்றும்,
மூன்றாம் திசையில்
உடல் முழுதும் வரிகளுடன்
சர்ப்பமொன்றும்
விரைகின்றன..
நான்காம் திசையின்
கரு நிற பெருவெளியில்
வியர்த்தெழுந்து
விழிக்கிறேன்..
என்னை நோக்கி நகர்கிறது
மரண வாயில்...

 - தேனு

நன்றி வல்லினம்
http://www.vallinam.com.my/issue34/poem8.html

No comments:

Post a Comment